பிக் பாஸிற்கு செல்வதற்கு முன் தனது தாய், கணவர், பிள்ளைகள் அனைவருக்கும் நிஷா போட்ட உருக்கமான பதிவு.

By Rajkumar · 4/10/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நேற்று மாலை துவங்கியது.நேற்றே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆனால், இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்று 100 சதவீத தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சில லீக்ஸ் வெளியாகியுள்ளது.

இதுவரை வந்த தகவலின்படி இந்த சீஸனின் ஷிவானி நாராயணன், அர்ச்சனா, வேல்முருகன், பாலாஜி முருகதாஸ், அணு மோகன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, அணு மோகன், ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ என்று பலர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போதுஇந்த சீசனில் பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதர்க்கு முன்பாக அறந்தாங்கி நிஷா தனது குடும்பத்தார்க்கு சில உருக்கமான பதிவுகளை செய்துள்ளார். அதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நீங்க இல்லைன்னா நிஷா இல்லமா என்ன சொன்னாலும் எப்பவும் நீங்க மட்டும் தான் என்னோட நம்பிக்கை என்கிட்ட பேசாம ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டீங்க ஆனா நமக்காகத்தான் இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல தனது கணவர் மற்றும் பிள்ளைகள் குறித்து குறிப்பிட்டுள்ள நிஷா, என் தங்க மகனே லவ் யூ டா , மச்சான் எப்படியும் இப்படி சிரிச்சிகிட்டே இருங்க சரியா என்று பதிவிட்டுள்ளார். நிஷாவின் இந்த பதிவுகளை வைத்துப்பார்க்கும் போது இவர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full