கணவருக்கு பயந்து நித்யா எடுத்த அதிரடி முடிவு.! இவங்களுமா விளங்கிடும்.!

By Rajkumar · 17/4/2019

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நித்யாவிற்கு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவருடன் தொடர்பு இருப்பதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டு பெரும் அதிர்ச்சி கொடுத்தார் பாலாஜி. இந்த நிலையில் தற்போது நித்யா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாராம்.

அதும் தமிழ் நாட்டில் இல்லை டெல்லியில், இதுகுறித்து பேசிய நித்யா '
காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன். நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி பாலாஜி ஏதாவது அவதூறு பரப்ப திட்டம் வச்சிருந்தார். அதனால் அவருக்கு பயந்துதான் தற்போது டெல்லியில் போட்டியிடுகிறேன்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full