பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். மேலும், மீண்டும் எஸ் பியின் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

Advertisement

எஸ் பி பி விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், சினிமா பிரபலங்களும் எஸ் பி பி விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது எஸ் பி பி ஆபத்தான நிலையை மட்டும் கடந்து இருக்கிறார். இந்த நிலையில் பாடகியும் எஸ் பி சரணின் தோழியுமான ரம்யா பேட்டி ஒன்றில் பேசுகையில், எஸ் பி பியின் நிலை இன்று நன்றாக இருக்கிறார். ஆனால், மோசமான நிலையில் இல்லை.

விரைவில் அவர் குணமடைவார். மேலும், ரம்யாவின் கணவர் கூட கொரோனாவால் பதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்போவோம் அவர் கொஞ்சம் மோசமான நிலையில் தான் இருக்கிறார். ஆனால், முன்பை விட இப்போ பரவாயில்லை. எனவே, அவருடைய நிலையில் தான் என் அப்பாவை தான் பார்க்கிறேன். விரைவில் எஸ் பி பி சாரும் விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement