பார்ட்டி உடையில் ரம்யா பாண்டியன் நடத்தி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம்.

இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார்.

Advertisement

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.பின் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதன் பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும், அதனையெல்லாம் சமாளித்து படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளியா “நண்பகல் நேரத்து மயக்கம்” மலையாளம் டப் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது இவர் படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. போட்டோ ஷூட்டிற்கு பெயர் போன ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் தான் பிரபலமானார். ஆனால், சமீப காலமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவுடுவதை நிறுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டி உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் ‘பட வாய்ப்புகள் குறைந்தவுடன் உடை அளவு குறையும்’ , இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ் நாட்டின் மியா கலீபாவா மாறிடுவீங்க’ என்று கமண்ட் செய்து வருகின்றனர். மேலும், அவரது ரசிகர்கள் சிலர் ‘ என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்று புலம்பி வருகின்றனர்.

Advertisement