நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அம்மணி, ரசிகர்கள் தன்னை மறக்க முடியாத வண்ணம் கவனமாக இருந்து வந்தார். போட்டோ ஷூட் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

Advertisement

கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த டாக்கில் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று ரம்யா பாண்டியன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி வந்தார். அப்போது பேசிய அவர் ‘தான் கல்லூரி படிக்கும்போதே என்னுடைய செலவை நானே பார்த்துக் கொண்டேன். அதன் பின்னர் ஒரு அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றேன் அப்போது என்னுடைய அக்கா ஆடை வடிவமைப்பாளராக இருந்தபோது அவருடன் ஒரு நாள் சென்றேன். அப்போது அங்கு இருந்தவர் சும்மா என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தின் மூலம் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் என் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க சென்றுவிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளம் இல்லை என்று சொன்னார்கள். இருப்பினும் இந்த கதை மிகவும் நல்ல கதை என்று கூறினார்கள். இதனால் அப்போது நான் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய வேலையை விட்டுவிட்டு அந்த படத்தில் நடிக்க சென்றேன். ஆனால் நான் ஒரு நாள் தான் நடித்தேன். நான் நடித்த அடுத்த நாளே என்னை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகையை அந்த படத்தில் கமிட் செய்துவிட்டனர்.

Advertisement

அதன் பின்னர் தான் எனக்கு ஜோக்கர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பல தேசிய விருது கிடைத்தாலும் எனக்கு பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி நான் வருத்தப்படவும் இல்லை’ என்று கூறியிருந்தார் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் சொன்ன பிறகுதான் ஜோக்கர் படத்தில் நடித்தது ரம்யா பாண்டியன் என்று தெரியவந்தது. ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement
Advertisement