குளிக்கறதே இல்லையா ? மேக்கப் இல்லாம பக்க முடியல - ரேஷ்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 4/6/2021

"புஷ்பா புருஷன்" என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சமீபத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை தான் ரேஷ்மா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்றும், அதற்காக தான் அவருடைய புகைப் படத்தை போட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்கள். இது தொடர்பாக இணையங்களில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. மேலும், இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார்.

இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான "வம்சம்" என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

மேலும், இவர் தயாரித்த "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" என்ற படத்தில் 'புஷ்பா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கொழுக்மொழுக் லுக்கில் இருந்த ரேஷ்மா தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். உடல் எடை குறைத்த பின்னர் அடிக்கடி படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் துளியும் மேக்கப் போடாமல் யோகா சனம் செய்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் ரேஷ்மா அதற்கு ரசிகர்கள் சிலர் பார்த்த ரசிகர்கள் பலர் ’மேக்கப் போட்டு வொர்க்-அவுட் செய்யுங்கள் என்றும் அப்போதுதான் பார்க்க நல்லா இருக்கும் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் ரேஷ்மா இந்த பதிவின் கேப்ஷனாக, ‘நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் முடக்கிவிட்டு சென்றால் தான் முன்னேற முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full