இது ஒன்னும் பிக்பாஸ் இல்ல..! அதைவிட கேவலம்.! ஆவேசமாக பேசிய ரித்விகா..!

By Ajju · 29/9/2018
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியிருந்த நிலையில் ரித்விகா தான் டைடல் வின்னர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே தனது பொறுமையான குணத்தாலும், நிதானமான ஆட்டத்தாலும் மக்களின் அபிமானத்தை பெற்றார் ரித்விகா. பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரித்விகா, அதன் பின்னர் ரஞ்சித் இயக்கிய "மெட்ராஸ்","கபாலி " போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள "பரையேறும் பெருமாள்" திரைப்படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும், கீழ் சாதியினர் ஒடுக்கப்படுவது குறித்தும் மிக ஆழமான கருத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தை பற்றி பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகை ரித்விகாம், ஜாதி கொடுமை பற்றியும், மனிதனின் கழிவை மனிதனே அள்ளும் அவள நிலை குறித்து ஏற்கனவே பேசியுள்ள வீடியோ பதிவு ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full