சமீப காலமாக இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக இருந்து வருபவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தான். சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியனை தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகைகளின் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள். ஆனால், ஷிவானி நாராயணனன் தான் தற்போது ஒட்டு மொத்த இளசுகள் மனதையும் கொத்தாக கொள்ளைகொண்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி.

Advertisement

பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். 19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவருக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறதா என்பதை யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அம்மணியின் வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

வழக்கம் போல இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வந்தது. இது ஒருபுறமிருக்க நடிகை ஷிவானி விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வது சீசனில் பங்கு பெறப் போவதாகவும் சில செய்திகள் வெளியானது இதனால் குஷியான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நீங்கள் வந்தால் உங்களுக்கு ஒரு ஆர்மியை துவங்குவோம் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் நீங்கள்தான் வெற்றியாளர் என்றும் ஷிவானியை உசுப்பேற்றி வருகிறார்கள்

Advertisement
Advertisement