விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை , ஆக்டொபர் 6 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம்.

இந்த சீசனில் ரன்னர் அப்பான சாண்டியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ரசிகர்கள்பலராலும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்து வந்தார். சாண்டி, விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதர்க்கு முன்னர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார்.

Advertisement

விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது . பிக்பாஸ் ஆரம்பத்தின் முதலே தனது ஜாலியான குணத்தினால் மற்ற போட்டியாளரிடம் விரைவில் நெருக்கமானார் சாண்டி. பிக் பாஸ் வீட்டில் சாண்டிக்கு மிகவும் நெருக்கமானது கவின் தான். இந்த சீசன் ஆரம்பித்த நாள்முதல் கவினுக்கு இவர் பெரிதும் உறுதுணையாகஇருந்து வந்தார். மேலும் இவரால் பிக்பாஸ் வீட்டில் வி ஆர் த பாய்ஸ் என்ற கேங்கும் துவங்கியது. மேலும், பிக் பாஸ் வீட்டில் பல்வேறு கானா பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவரது கானா பாடலை கமல் கூட பல முறை பாராட்டி இருக்கிறார். மேலும், சாண்டி நடிப்பிற்கு இலக்கணமாக இருக்கிறார் என்று கமல் சாண்டியை பல முறை பாராட்டியும் இருக்கிறார் .

இந்த சீசனில் சண்டிக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது அவரது மகள் லாலா தான். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த எபிசொட் ரசிகர்கள் மறக்க முடியாத எபிசோடாக இருந்து வருகிறது. அதே பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளின் போது சாண்டி, தனது மகள் லாலாவை மேடைக்கு அழைத்து அவரை கமலிடம் கொடுத்தார். அதே போல இறுதி போட்டியின் போதும் கமலிடம் லாலாவை கொடுத்து அழுகு பார்த்தார் சாண்டி.

Advertisement

மேலும், சாண்டி மீது கமலுக்கு கூட ஒரு தனிப்பட்ட பிரியம் இருப்பது போல தான் தெரிந்தது. இந்த நிலையில் சாண்டி தனது செல்ல மகள் லாலா மற்றும் தனது அன்பு மனைவியுடன் கமலை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது கமல், லாலாவுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே போல சாண்டி இறுதி போட்டியின் போது கமலிடம் உங்கள் படத்தில் நான் வேலை செய்ய விரும்புகிறேன் என்று கேட்டிருந்தார். எனவே, இந்த சந்திப்பில் அது குறித்து கூட சாண்டி பேசி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement