பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் சரத்குமார் உள்ளே வந்து இருந்தார். கடந்த சீசனில் 5 லட்ச ரூபாபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கேபி. மேலும், இவரது முடிவை பலரும் பாராட்டினர். மேலும் அதற்க்கு முந்தய சீசனில் கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

Advertisement

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சரத்குமார் :

அந்த சீஸனின் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.கடந்த இரண்டு சீசனில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் 3 லட்சம் தற்போது வரை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்டியை யாரும் எடுத்து செல்லவில்லை என்றால் அடுத்த தொகை மாறும்.

பெட்டியை எடுத்து வர இவ்ளோ சம்பளமா :

பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் என்றால் சும்மா ஒன்றும் வந்துவிட மாட்டார்கள் அல்லவா. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப் பெட்டியை எடுத்து சென்ற சரத்குமாருக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை பார்க்கும் போது ‘பஸ்க்கு டிக்கெட் 5 ரூபா பூ 50 ‘ என்ற வடிவேலு காமெடி தான் நினைவிற்கு வருகிறது .

Advertisement

சரத் குமாரின் கோடீஸ்வரன் :

நடிகர் சரத்குமாருக்கு டிவி நிகழ்ச்சி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபார்ப்பான ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்து. அந்த நிகழ்ச்சிக்கு பின்னரே விஜய் டிவியில் உங்களில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

யார் பணப் பெட்டியை எடுத்து செல்வார் :

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் யார் இந்த பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள். அதே போல இந்த சீசனில் டாப் இரண்டு இடத்தில் இருக்கும் ராஜு, பிரியங்கா கண்டிப்பாக இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல அமீர், ஏற்கனவே இறுதி போட்டிக்கு சென்றுவிட்டார் என்பதால் அவர் எடுப்பது சந்தேகமே .

Advertisement