பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொலார் அத்துமீறி நடப்பதை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் பிக் பாஸ் சரவணனுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் வெளியேற்றத்தை போல இவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார்.

Advertisement

அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ‘லைஃப் ஆப் பேச்சுலர்’ பாடலை எழுதி இருக்கிறார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். திலும் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. விக்ரமனனுடன் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார்.

Advertisement

இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை செய்வது தவறு என்றெல்லாம் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார். அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை நொண்டியது என்று தன் தடவல் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அசல்.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அசல் நிவாஷினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி இருந்தார். இப்படி இவர் பெண்களிடம் அத்து மீறி நடந்துகொள்வது பலரை முகம் சுழிக்க வைத்து வருகிறது. இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் சரவணன் வெளியேற்றத்தை எடுத்துக்காட்டாக கூறி வருகின்றனர்.

அந்த சீசனில் ஒரு எபிசோடில் கமலிடம் சரவணன் பேசிய போது தன்னுடைய கல்லூரி பருவத்தில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்து இருக்கிறேன். பின்னர் அது தவறு என்பதை உணர்ந்தேன் என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்களை குறித்து இப்படி பேசியதால் சரவணன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தனர்.

இஅதற்க்கு சரவணனும் ‘நான் கல்லூரி படிக்கும் போது உண்மையாக பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன். ஆனால், அது தவறு என்பதை பின்னர் உணர்ந்து என்னை போல யாரும் செய்ய வேண்டாம் என்று தான் கூற முயன்றேன். ஆனால், நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்ல முடியாமல் போனது என்று கூறியிருந்தார். இருந்தும் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். தன்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த சம்பவத்தை சொன்னதற்கே ரெட் கார்ட் கொடுத்து சரவணனை வெளியேற்றிய பிக் பாஸ் குழு, பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் பெண்களிடம் தொடர்ந்து அநாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் அசல் கோளாறை ஏன் கண்டுகொள்ளவில்லை என்றும் சரவணனுக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement