டான் படத்தை படம் பார்த்து கண்கலங்கி நடிகர் சரவணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

டான் படத்தின் கதை:

பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் முயற்சியில் இருக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? சாதித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

டான் படம் குறித்து சரவணன் கூறியது:

படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டான் படம் குறித்து நடிகர் சரவணன் கூறியிருப்பது, படத்தின் இயக்குனர் உட்பட அனைவருக்குமே என்னுடைய பாராட்டுகள். டான் படம் என்னை கண் கலங்க வைத்துவிட்டது. இந்த படத்தில் சமுத்திரக்கனி என்னுடைய அப்பாவை எனக்கு நினைவு படுத்தி விட்டார். என்னுடைய அப்பாவின் கண்டிப்பு உள்ளிட்டவை இந்த படம் நினைவுபடுத்தியது. என்னுடைய பேராசிரியர்களை எஸ் ஜே சூர்யா நினைவுபடுத்தினார்.

Advertisement

சரவணனின் திரைப்பயணம்:

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் கண் கலங்கி விட்டேன் என்று கூறியிருந்தார். 90 காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். இவர் 1991 இல் வைதேகி வந்தாச்சு படம் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின் இடையில் சில காலங்கள் இவர் வாய்ப்புகள் குறைந்தவுடன் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Advertisement

சரவணன் நடித்த படங்கள்:

பின் மீண்டும் இவர் 2007 இல் வெளியான பருத்திவீரன் படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வைத்து இருந்தார். இந்த படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக சரவணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் அரண்மனை, கடைக்குட்டிசிங்கம், கோலமாவு கோகிலா போன்ற பல படங்களில் சரவணன் நடித்து இருந்தார்.

Advertisement