3 வயதில் ஷெரீனை விட்டு சென்ற தந்தை இவர் தான்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.!

By Rajkumar · 16/9/2019

தமிழ் திரைப்பட உலகில் 20வது காலங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் செரின் ஷிரிங்கார் என்பவரும் ஒருவர். சினிமா துறையில் இவருடைய பெயர் செரின் என்று தான் அழைப்பார்கள். முதலில் இவர் வடிவழகி ஆக இருந்து பின்னர் தான் நடிகையாக ஆனார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் படங்களை நடித்து உள்ளார்.இவரின் 16 வயதில் 'தர்ஷன்' என்ற படத்தில் சினிமா துறைக்கு அறிமுகமானார்.செரின் கர்நாடகத்தில் சார்ந்தவர். இவர் பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார் மற்றும் பெங்களூரில் பிறந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை பெங்களூரில் படித்துவிட்டு , கல்லூரி படிப்பை பால்ட்வின் மகளிர் மெதடிஸ்ட் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வடிவழகி ஆக பணிபுரிய தொடங்கினார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் துள்ளுவதோ இளமை, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது விஜய் டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் யார்? வெற்றி பெறுவார் என்ற தகவலும் வந்துவிடும். இதில் சில பேர் செரின் தான் வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையும் பாருங்க : கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லை.! சாண்டி நாமினேட் செய்தது யாரை தெரியுமா ?

இப்படி சந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும் செரின் ஷிரிங்கார் வாழ்வில் மிகப்பெரிய அளவில் யாருக்கும் நடக்காத கொடுமையான சம்பவங்களும் நடந்துள்ளது. செரின் அப்பா மூன்று வயதிலேயே அவரை விட்டுட்டு போய் விட்டார் என்ற தகவல் வெளிவந்தது. கடந்த வாரம் நடந்த ப்ரிஸ் டாஸ்கில் செரினுடைய அம்மா, மட்டும் நெருங்கிய தோழி வந்து இருந்தார்கள்.செரின் அம்மாவை கட்டிப்பிடித்து எனக்கு அப்பா பார்க்கணும் போல இருக்கும்மா!!!! சேரன் சார் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அப்பா உணர்வு ஏற்படுகிறது. அவர் தன்னுடைய குழந்தைகளுடன் காட்டும் பாசம் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது எனக்கும் அப்பா இருந்தால் நல்லா இருக்குமே? என்று ஏக்கத்துடனும் மன குமறலுடன் அழுந்து கொண்டிருந்தார். இதுகுறித்து செரின் சித்தி கூறியது, செரின் அப்பாவிற்கு ஆண் குழந்தை மீது தான் அதிக ஆசை இருந்தது. ஆனால் என் அக்காவிற்கு அழகான ஏஞ்சல் போல ஷெரின் பிறந்தால்.

ஆனால் அவருக்கு அப்போது குழந்தை மீது எந்த பாசமும் ஆசையை வார்த்தையும் பேசவில்லை. மூன்று வருடங்கள் வரை சண்டை, பல பிரச்சனைகள் வந்து கடைசியில் செரின் அப்பா எனக்கு ஆண் குழந்தை வேண்டும் நான் வேறு ஒரு திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கண்டிப்புடன் அவருடைய அம்மாவிடம் கூறிவிட்டு சென்றார். இதனால் என் அக்கா மற்றும் செரின் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். செரின் ஷிரிங்காரை சிங்கிள் மதராக நின்று இந்த உலகத்தில் வளர்த்தால். தற்போது சினிமா துறையில் சாதனை படைத்த, பிரபலமான செரின் ஷிரிங்காரை வளர்க்க பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வளர்த்தாள்.

ஷெரின் பற்றி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் கேட்டபோது அவர் கூறியது, எப்பவுமே அவங்க அப்பா நியாபகம் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு அவங்க அம்மா பாசமாக இருப்பார்கள். ஆனால் இந்த பிக்பாஸ் வீட்டில் வந்து சேரன் சார் தன்னுடைய குழந்தைகளுடன் பழகும் விதத்திலும் காட்டும் அன்பையும் பார்த்து அவருடைய மனதில் அப்பா வேண்டும் என்ற ஏக்கம் தோன்றியது நாங்கள் வீட்டுக்கு வந்தவுடனே எங்களிடம் கேட்டது ஏம்மா என்ன பாக்க அப்பா வரலை என்று அவருடைய குமுறல் எங்கள் மனதை உலுக்கியது. அவங்க அம்மா அதற்கு சரியான காரணத்தையும் கூறி அவரை சமாதானம் செய்தார்கள்.ஆண் குழந்தை வேண்டும் என்ற ஒரு முட்டாள் நம்பிக்கையில் ஒரு அழகான தேவதையை மறந்து விட்டார் என்ற கருத்துக்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் மூலமாவது செரின் அப்பா திரும்ப வந்து சேர வேண்டும் என்ற கருத்துக்களை பதிவிட்டு உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full