பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை தன்னுடைய மகனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்து கொண்டவர் தான் தாமரை செல்வி. இவர் தன்னுடைய சிறு வயதிலேயே மேடை நாடக கலைஞராக மாறி குடும்ப கஷ்டத்தை போக்க வேலை செய்தார்.

மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதோடு பிக் பாஸின் வார தலைவராக தாமரை செல்வி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். அவர் கூறுகையில் “வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்து விட்டார்களாம்.

Advertisement

அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார்.

மேலும் தன்னுடைய முதல் கணவரின் மகன் ஏதோ காரணத்திற்காக தன்னிடம் பேசவில்லை என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். அதோடு விரைவில் தன்னை புரிந்து கொண்டு தன்னுடைய மகன் என்னுடன் இணைவார் என்று கூறியிருந்தார். அதற்கு பிறகு பலர் தாமரையின் மகனை அவருடன் பேச வைக்க முயற்சி செய்தனர். அதில் முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் பிக் பாஸ் போட்டியாளர் ராஜூவை சொல்லலாம். ஒரு முறை உன்னுடைய மூத்த மகனை உன்னுடன் சேர்த்து வைப்பேன் என்றும் சத்தியம் செய்திருந்தார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாமரை எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தான் தாமரை திடீரென தன்னுடைய மகனுடன் இணைந்து மிகவும் மகிச்சியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தாமரை அவரது கணவர் மற்றும் மூத்த மகன் சிவா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பல வருடங்கள் கழித்து தன்னுடைய மகனுடன் இணைந்த தாமரைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Advertisement