பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இந்தநிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி கூறுகையில் தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : பிரசன்னாவை மறந்த ‘மாபியா’ பட இயக்குனர். கடுப்பான ரசிகர்களுக்கு இயக்குனர் சொன்ன காரணம்.

இது ஒருபுறம் இருக்க தர்ஷன் மீது சனம் ஷெட்டி பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் சமீபத்தில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி செல் போனில் உரையாடிய ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் தர்ஷனை சனம் ஷெட்டி ‘நீஎல்லாம் ஒரு ஆம்பளையாட’ என்று கேட்டுள்ளார். மேலும், தர்ஷன், எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைத்தால் நான் படுக்கையை பகிர வேண்டும் என நீ சொல்லவே இல்லை என்று கேட்கிறார் அதற்கு சனம் ஷெட்டி ‘ஆம், நான் சொன்ன அதில் என்ன புதுசா இருக்கு, உன்னிடம் நான் அனுமதி கேட்டேன்’ என்று கூறுகிறார்.

Advertisement

இந்த ஆடியோ சமூக வளைத்ததில் வைரலாக பரவியது. ஆனால், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள சனம் ஷெட்டி, அந்த குரல் என்னுடையதே இல்லை நான் அப்படி பேசவும் இல்லை, இப்படி ஒரு உரையாடல் நடந்ததும் இல்லை. முழுமையாக விசாரிக்காமல் இப்படி பதிவிட்டால் நான் அதை பதவிவிடும் சேனல் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆடியோ என்னை தவறாக சித்தரிக்க வேண்டும் என்பதர்க்காக இதனை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டி.

Advertisement
Advertisement