நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பீட்டரின் மனைவி எலிசபெத்.

வனிதாவின் திருமண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வரும் பெரும்பாலானோர் கேட்கும் ஒரே கேள்வி இப்படி ஒரு பிரச்சனை இருக்கையில் பீட்டர் பவுல் ஏன் இன்னும் பேட்டிகளில் பங்கு பெறாமல் மௌனம் சாதித்து வருகிறார் என்பதுதான்.அதேபோல பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத், பீட்டர் பவுல் என்ன முத்தம் கொடுக்க மட்டும்தான் கேமரா முன் வருவாரா ? இவ்வளவு பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது அவர் ஏன் இன்னும் அவர் ஒரு பேட்டிகளில் கூட கலந்து கொள்ளவில்லை.

Advertisement

எதற்கு எடுத்தாலும் வனிதா தான் முன்னால் வந்து நிற்கிறாள். இது எனக்கும் பீட்டர் பவுலுக்கும் இடையிலான பிரச்சனை இடையில் பேச இவள் யார் கணவன்-மனைவி பிரச்சினைகளை பேச இவர் யார் என்றெல்லாம் விளாசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் ஒன்றாக இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் இணைந்து கொடுத்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த பேட்டியை பார்த்து பீட்டரின் மனைவி எலிசபெத் கூட ஒரு பேட்டி அளித்திருந்தார் இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் பீட்டர் இருவரும் ஒன்றாக இணைந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை காலை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
Advertisement