கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

வனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

Advertisement

இந்தநிலையில் கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தின் தயாரிப்பாளரான ரவீந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது அவரிடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் மற்றவர்களைப் போல நானும் வனிதாவின் மிகப்பெரிய ரசிகர் தான். மேலும், வனிதாவிற்கு திருமணம் என்ற செய்தியைக் கேட்டதும் நான் சந்தோஷப்பட்டேன். ஆனால், பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகாமல் இருக்கும் நிலையில் வனிதா திருமணம் செய்து கொண்டது சட்டப்படி குற்றம்தான்.

ஒரு சாமானிய மனிதனாக இதை நான் கேள்வி கேட்பேன். இது சமூகத்திற்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடும். மேலும், தன்னை கேள்வி கேட்பவர்களை எல்லாம் திட்டி தீர்த்து வருவது எந்த விதத்தில் நியாயம். மேலும், ஒருவருக்கு விவாகரத்து ஆகாமல் அவரை திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம்தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது தர்ஷன் ஷெரின் விஷயத்தில் வனிதா சனம் ஷெட்டி காதல் விவகாரம் குறித்து பேசுகையில் தர்ஷன் மற்றும் ஷெரின் உறவை கள்ளத்தொடர்பு என்று கூறி இருந்தார்.

Advertisement

அப்போது இதற்குப் பெயர் என்ன நான் என்ன ? நான் வேண்டுமானாலும் செய்வேன் என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது மீறி கேள்வி கேட்டால் அவர்களைதிட்டி தீர்ப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம். மேலும் பீட்டரின் மனைவி எலிசபெத்தை லூசு என்றும் அவர் பிரபலமடைய இதை செய்கிறார் என்றெல்லாம் வனிதா பேசியதை கேட்டு தான் எனக்கு மிகவும் கோபமாக வந்தது.நான் இங்கே வனிதாவிற்கு திருமணம் என்றோ அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்கிறார் என்றோ, இரண்டு குழந்தைக்கு அம்மாவான வனிதா திருமணம் செய்கிறார் எனறோ எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என்னுடைய கேள்வி மிகவும் எளிமையானது, ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும் போது அவரை விவாகரத்து செய்யாமல் பீட்டர் உங்களை திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதம் தான். நீங்கள் விவாகரத்து பெற்று விட்டு திருமணம் செய்து கொண்டால் உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ரவீந்திரன்

Advertisement
Advertisement