சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ரீ-என்ட்ரியாக அமைந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ தொடரில் சிறப்பு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டிச் சென்றார். தற்போது கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,நந்தினி ஜெயராம், என்னுடைய இரண்டாவது அம்மா. மிகவும் அற்புதமான அழகான ஜீவன். என்னுடைய மிகப்பெரிய ரசிகை மற்றும் நண்பர். உங்களை எப்போதும் மிஸ் செய்வேன். கண்டிப்பாக நீங்கள் நேரடியாக சொர்க்கத்திற்கே சென்று அங்கே உள்ள உங்களது நண்பர்களை சந்திப்பீர்கள். அங்கே ஜாலியாக இருங்கள் என்னுடைய அம்மாவிற்கு ஹாய் சொல்லுங்கள், உம்மா #RIP என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு இரங்கலை பார்த்ததே இல்லை என்று வியந்துள்ளனர்.

Advertisement

Advertisement