பிக் பாஸ் வனிதாவுக்கும், பீட்டர் பவுல் என்பவருக்கும் ஜூன் 27 திருமணம் நடைபெற்றது. வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது முதல் மனைவி எலிசபெத். மேலும், தனது கணவர் பீட்டர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்து வருகிறார் பீட்டரின் மனைவி எலிசபத்.

வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும்

வனிதா மற்றும் பீட்டரின் திருமண செய்தியை அறிந்த பீட்டரின் மனைவி எலிசபெத் சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல் ஆய்வாளர், எலிசபெத்தின் கணவர் பீட்டர் விசாரித்துள்ளார். அப்போது தனது முதல் மனைவியான எலிசபெத்தை விவாகரத்து செய்துவிட்டு தான் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக எழுதி கொடுத்து சென்றுள்ளார் பீட்டர். இதையடுத்து அடுத்த சில நாளிலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

ஆனால், பீட்டரின் மனைவி எலிசபெத் தனக்கு பீட்டர் எந்தவித விவாகரத்தும் அளிக்கவில்லை என்றும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார். மேலும், பீட்டர் மற்றும் வனிதாவின் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக கூட காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு அவர்களின் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள் என்று புகார் அளித்திருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களாக பீட்டரின் மனைவி எலிசபத் எந்த பேட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

இப்படி ஒரு நிலையில் வனிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி மீதும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து எலிசபெத் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள எலிசபெத், பீட்டர் பவுல் கிஸ் அடிக்க மட்டும் தான் வருவானா. வனிதா பின்னால் நின்று கொடுக்கும் பொட்ட அவன். அவனும் வனிதாவும் அந்த மாதரி வீடியோ கூட வெளியிடுவாங்க.

Advertisement

மேலும், வனிதா விஷயம் மட்டுமல்ல 10 எண்றதுக்குள்ள படத்தில் குரூப் டான்சராக இருந்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அப்போது அவர், நீங்கள் இருவரும் சண்டை போடுங்கள் யார் வெற்றி பெருகிறீர்களோ அவர்களுக்கு தான் நான் என்று சொன்னான் என்றும் கூறியுள்ளார் எலிசபெத். மேலும், என்ன நடத்தாலும் அவர் தான் என் கணவர் என் பிள்ளைகளுக்கு அப்பா வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement