இதான் அவர் எனக்கு செஞ்சாரு - பீட்டர் குறித்து பல உண்மைகளை சொன்ன அவரது மகன்.

By Rajkumar · 20/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணசர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா பீட்டர் பவுல் விஷயத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மகன் ஜான், தனது தந்தையான பீட்டர் குறித்து பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார். பீட்டர் பவுலின் மகனிடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் அளித்த பேட்டி குறித்து கேட்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=uwUg8diIWmU&t=361s , அதற்கு பதிலளித்த அவர் நான், அந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கவில்லை. பாதி தான் பார்த்தேன். ஏனென்றால் அவர் அந்த பேட்டியில் பேசியது அனைத்தும் பொய் தான். அவருக்கு பொய் சொல்வதில் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம். நான் எங்கே சென்றாலும் என்னடா உன் அப்பா இப்படி செய்கிறார் என்று கேட்கிறார்கள். தினமும் எனக்கு நூறு செல்போன் அழைப்புகள் வருகிறது. அதில் சிலர் ஆதரவாகப் பேசினாலும் ஒரு சிலர் என்ன உன்னுடைய அப்பா இப்படி செய்து விட்டார் என்று கேட்கிறார்கள். இந்த திருமணத்திற்கு முன்னால் வரை அவருடன் பேசிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், எப்போது அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் அவரிடம் எனக்கு பேச தோன்றவில்லை. மேலும், அவர் சொல்வது போல அவர் எனக்கு ஸ்கூல் பீஸோ அல்லது காலேஜ் பீஸோ கட்டவில்லை. என் அம்மாதான் எனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினார்கள். அவ்வளவு ஏன் நான் அவரிடம் பல மாதங்களாக ஒரு நல்ல செல்போன் வாங்கிக் கொடுங்கள் என்றேன். ஆனால், அதற்கு அவர் சாக்கு சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக எனக்கு ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்தார். https://www.youtube.com/watch?v=zXnlBfOt608

ஆனால், அதைக் கையில் எடுத்துக் கொண்டு போய் கொடுத்தால் அதற்கு ஸ்பேர் பார்ட்ஸ் கூட இல்லை என்கிறார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தால் ஏன் என்னை ஏமாற்றினார்கள் என்று கேட்பேன். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தால் கண்டிப்பாக நாங்கள் சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதை விட்டுவிட்டு வனிதாவுடன் அவரும் சேர்ந்து என்னை பேட்டிகளில் சும்மா இழுத்துக் கொண்டே இருந்தால் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full