வனிதா, அந்த பயத்துலதான் நீ அழுதனு நல்லா தெரியுது - மீண்டும் வனிதாவை சீண்டும் சூர்யா தேவி.

By Rajkumar · 22/10/2020

நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் 'பீட்டர் பவுலுக்கு விவாகரத்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நானே செருப்பால் அடித்து விரட்டி இருப்பேன். அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்த பின்னர்தான் அவர் விவாகரத்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=GdIykHD2mH4

அதேபோல பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டார் இருப்பினும் அவ்வப்போது குடித்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தார். இதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் .அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பிரச்சினை கிடையாது.

அவர் குணமடைந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அதன்பின்னர் மருத்துவர்களும் அவருக்கு இனிமேல் குடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அவரும் கொஞ்சம் நாட்கள் ஒழுங்காகத்தான் இருந்தார் சமீபத்தில் நாங்கள் கோவா சென்றபோது அவரது சகோதரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்று போன் வந்தது. அப்போது கிளம்பும்போது அவர் மது அருந்தி இருந்தார். உள்ளே நுழைந்ததும் ஒரு சிகரெட் வாடை அடித்தது. இதனால் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அங்கிருந்து அவர் கார் ஓட்டி சென்னைக்கு வருவதாக சொன்னார். ஆனால் நான் அதைக் கேட்கவில்லை நானே ஒரு 14 மணிநேரம் காரை ஓட்டிவந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

https://www.youtube.com/watch?v=FzDgGjDjHRA

வீட்டுக்கு வந்தவுடன் அவரை காணவில்லை அதன்பின்னர் எங்கெங்கோ சென்று தினமும் குடித்து இருக்கிறார். எனக்கு தெரிந்தவர்கள் அவரை வீட்டில் அழைத்து வந்து விடுவார்கள். நான் எவ்வளவோ அவரிடம் கேட்டேன் நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பை விட அந்த குடியும் சிகரெட்டும் முக்கியமா என்றெல்லாம் கேட்டேன். ஆனால் அவர்குடிக்கு அடிமையாகி விட்டார் என்னை பற்றி அவர் கவலைப்படவில்லை. எலிசபெத் அனுபவித்த வலி என்னவென்று எனக்கு இப்போது புரிகிறது. அவர் இவரைப் பற்றி சொன்ன ஒரு பத்து சதவீதம் எல்லாம் உண்மை போல தான் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. உங்களை நான் எந்த விதத்திலாவது புண் படுத்தி விட்டால் என்னை மன்னித்துவிடுங்கள் எலிசபெத் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார் வனிதா.

வனிதாவின் இந்த வீடியோவை பார்த்து பலரும் கொஞ்சம் சோகத்தில் ஆனாலும் ஒரு சிலர் வனிதாவின் இந்த நிலை குறித்து சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். அதில் சூர்யா தேவையும் ஒருவராக இருக்கக்கூடும். வனிதாவின் மூன்றாம் திருமண விஷயத்தில் சூர்யா போட்ட வீடியோக்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். இப்படி ஒரு நிலையில் வனிதா பீட்டர் பவுல் பிரிந்த பின்னர் சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போதும் வனிதாவை நம்ப முடியாது என்றும் ஒருவேளை பீட்டர் பவுல் இறந்து விட்டால் அதற்கு தான் காரணம் என்று பலர் நினைத்து விடுவார்கள் என்பதற்காக தான் பயத்தில் வனிதா அழுதார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் என்னென்ன கூறியுள்ளார் என்று நீங்களே வீடியோவில் பாருங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full