நாளுக்கு நாள் வனிதா மீதான புகார் அடுக்கடுக்காக குவிந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டில் இருந்து மனிதன் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ரவீந்திரன் கஸ்தூரி நாஞ்சில் விஜயன் லட்சுமி ராமகிருஷ்ணன் என்று பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் வனிதாவுக்கும் லட்சுமிராமகிருஷ்ணன் இருக்கும் பெரிய சண்டையே வெடித்தது.ஒருபுறம் பலரும் வனிதாவை திட்டி தீர்த்து வந்தாலும் இன்னொரு புறமோ பீட்டர் பவுலுன் வனிதா சந்தோஷமாக இருந்து வருகிறார். சமீபத்தில் பீட்டர் பவுல் பிறந்தநாளை கொண்டாடிய வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் வனிதா மீது அவர் வசிக்கும் அபார்ட்மென்ட் வாசி ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பீட்டர் பவுலுடன் இணைந்து தான் வனிதா அனுமதி இல்லாமல் அபார்ட்மெண்டில் ஷூட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த விடியோவை நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாருங்க.

Advertisement
Advertisement