நயந்தாராவிற்கு ரசிகர் இருக்குன்னா, எனக்கும் தான் இருக்காங்க - வனிதா அதிரடி பேட்டி.

By Rajkumar · 23/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பீட்டர் பவுல் மீது ஏற்கனவே பீட்டர் பவுலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண பிரச்சனையில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து விஷயத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா லைவ் பேட்டியில் தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையும் பாருங்க : அட, எவ்வளவு பெரிய நடிகை. ஆனால், வளைகாப்பை எவ்வளவு எளிமையா பண்ணியிருக்காரு பாருங்க.

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் , இவர்களெல்லாம் கமலஹாசன் நயன்தாரா போன்ற பெரிய நடிகர்களின் தவறுகளை பேச மாட்டார்களா? வனிதாவின் பிரச்சனை மட்டும்தான் பேசுவார்களா என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வனிதா இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள். அப்போது நயன்தாராவும் ஒருவேசியா அவர் பிரபுதேவாவுடன் வாழ்ந்த போது ஏன் நீங்கள் ரம்லாதிற்காக குரல் கொடுக்கவில்லை. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது. அவர்களும் கோர்ட் மீடியா என்று அலைந்தார்களே என்று பதிவிட்டிருந்தார்.

வீடியோவில் 21 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=hqLkrB_jhDs&feature=youtu.be

வனிதா, நயன்தாரா குறித்து வனிதா இப்படி பதிவிட்டு இருந்ததால் நயன்தாராவின் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள் இப்படி ஒரு நிலையில் நேற்று காவல் நிலையத்திற்கு வந்த வனிதா இந்த விஷயம் குறித்து கூறுகையில்,

Tamil Behind Talkies AMP · Quick view
View full