கடந்த சில தினங்களாகவே வனிதா மற்றும் பீட்டாகரோடின் திருமண விஷயம் தான் சமூக இணையதளம் முழுக்க நிரம்பி வழிகிறது. வனிதா கடந்த சில நாட்களாக பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகள் சமூக வளைதளத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் வனிதாவை பற்றி அவரது இரண்டாவது கணவர் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். வனிதா முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகளை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

Advertisement

மேலும், விவாகரத்து பின்னர் ஜெயனிதா, சில ஆண்டுகள் ஆனந்த் ராஜனுடன் தான் இருந்து வந்தார். ஆனால், வனிதா,பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தனது மகளை கடத்தி வந்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் ஆனந்த் ராஜன். அப்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ள ஆனந்த் ராஜன் பேசியுள்ளதாவது, சும்மா டிவியில் மட்டும் தாய் தாய் என்று சொல்கிறாள். ஆனால். அவள் விவாகரத்து பின்னர் தனது மகளைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. 2017 ஆம் ஆண்டு குழந்தையை பார்க்க வேண்டும் என்று மிகவும் பிரச்சினை செய்தால்.

அதனால் தான் நான் குழந்தையை கொடுத்தேன். அப்போதும் என் குழந்தையை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டாள். . அப்போது என் மகள் எனக்கு போன் செய்து இங்கே எனக்கு டார்ச்சர் தாங்க முடியவில்லை தினமும் குடிக்கிறார்கள்,பார்ட்டி செய்கிறார்கள் என்று போன் செய்தால். பின்னர் பத்து மாதங்கள் போராடி என்னுடைய குழந்தையை நான் என்னுடன் அழைத்து வந்தேன்.பின்னர் அதே போல இன்னொரு தடவை என்னுடைய குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது என்னுடைய குழந்தையிடம் ஏதேதோ கூறி மீண்டும் அவளுடன் அழைத்து சென்று விட்டாள் என்று கூறியிருக்கிறார் ஆனந்தராஜன்.

Advertisement
Advertisement