இன்னும் இரண்டு ஓய்ல்டு கார்ட் என்ட்ரி இருக்கு.! அதில் ஒருவர் இவர் தானம்.! லேட்டஸ்ட் அப்டேட்.!

By Rajkumar · 21/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்பங்கள் நடந்தேறி வருகிறது. சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டது என பல்வேறு சர்ச்சையான விடயங்கள் நடந்தேறியது.

சரவணன் வெளியேறிய அடுத்த வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கஸ்தூரி ஒய்ல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார். ஆனால், கஸ்தூரியின் என்ட்ரி நிகழ்ச்சின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட சிறிதும் பயன்படவில்லை. இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதாவை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் அழைத்து வந்தனர்.

இதையும் பாருங்க : ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர்.! 

வனிதா வந்த பிறகு நிகழ்ச்சியில் கொஞ்சம் சுவாரசியம் கூடியதாலும், கடந்த இரண்டு வாரத்தில் 4 போட்டியாளர்கள் வெளியேறியதாலும் வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துவிட்டது பிக் பாஸ். இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதால் வரும் வாரங்களில் இரண்டு ஓய்ல்டு கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் களமிறக்க இருக்கிறதாம்.

அதில் ஒருவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல இந்த வாரம் கஸ்தூரி ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு ஓய்ல்டு கார்டு என்ட்ரி மட்டும் நிச்சயம் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full