உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கிறதோ இல்லையோ பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஏதாவது ஓரு சம்பவம் நடந்து விடுகிறது. அதற்கு சான்றாக இன்று (ஜூன் 25 ) ஒளிபரப்பான நிகழ்ச்யில் நடிகர் மஹத் ஒரு அநாகரிகமான செயலை செய்து சக போட்டியக்ள்ர்களை கடுப்பெற்றியுள்ளார்.

Advertisement

இன்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் அனைவரும் படுக்க சென்றுள்ளனர். அப்போது மஹத் பெண்கள் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அங்கே ஒரு கட்டிலில் நடிகை ஐஸ்வர்யாவும், நடிகை யாஷிகா ஆனந்தும் ஒன்றாக படுத்துக் கொண்டிருந்தனர். மஹத் அவர்கள் இருவர் நடுவில் சென்று படுத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் நடிகர் பொன்னம்பலம் அவர் படுத்துக் கொண்டிருந்ததை பார்த்து ‘என்ன அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறீர்களா’ என்று நக்கலாக கேட்டுள்ளார். பல கோடி மக்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இரு பெண்களுடன் அதுவும் இரவு நேரத்தில் படுக்கையில் ஒன்றாக படுத்திருப்பது சகஜம் என்று யாரும் கருத மாட்டார்கள். எனவே , பிக் நிகழ்ச்சியில் நடந்து வரும் இது போன்ற அநாகரிகமான செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எரிச்சலை ஊட்டும் என்றும் தெரியவில்லை.

Advertisement

Advertisement

ஏற்கனவே விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் பெண்கள் சிலர் வரம்பு மீறி நடப்பது போல காட்டப்படுகின்றனர். இதனால் பல ரசிகர்களும் விஜய் டிவியை கடிந்து கொண்டு தான் வருகின்றனர். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் விதிவிளக்காக இருக்க போகிறதா என்ன?

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement