கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள ஜாம்பி படமும் வெளியாகி இருந்தது. மேலும், அந்த படத்தில் இவரது கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

Advertisement

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அதில் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களாக தான் இருக்கும். இதனால் இவரை பின் தொடர்பவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் பெஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். மேலும், அதற்கு முன்பாக பிகினி போன்ற உடையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யாஷிகா. இந்த புகைப்படத்தை கண்டு அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

Advertisement
Advertisement