தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே யாஷிகா ஆனந்த்க்கு நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது. இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான்.

பின் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனை தொடர்ந்து ஜோடி நம்பர் 1 சீசன் 10 இன் குழு தலைவராகவும் இருந்து உள்ளார். இவருடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு எம்ஜிஆர்– சிவாஜி விருது வழங்கப்பட்டு உள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Advertisement

இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகை யாஷிகா ஆனந்த்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு யாஷிகா நடித்த ஒரே படம் ஜாம்பி. இது பவன் நல்லன் இயக்கத்தில் உருவான படம். இந்த படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், பரிதாபங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவிற்கு கிளாமராக நடித்திருந்தார்.

Advertisement

இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான படம் இது தான். மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவு செய்து உ;உள்ளார். அதோடு விருது கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக நடிகை யாஷிகாவை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

இதெல்லாம் ஒரு படமா, இந்த படத்தில் கிளாமராக நடித்தவருக்கு அதுவும் எம்ஜிஆர்– சிவாஜி விருது கொடுக்கிறார்களா? விருதுக்கான மதிப்பு, மரியாதையை போயிடுச்சு என் நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்த்தை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். ஜாம்பி படத்துக்கு யாஷிகாவுக்கு விருதா? இதை பார்த்து ஒரு நிமிஷம் எங்களுடைய தலையே சுத்திச்சு என ரஜினிகாந்த் பேசிய வீடியோவை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சில பேர் யாஷிகாவுக்கு சிறந்த நடிகை விருது தரலாம். அது ஓகே ஆனால், ஜாம்பி படத்துக்கு விருது கொடுத்து இருக்கீங்களே என்று யாஷிகா ரசிகர்களே கூறுகிறார்கள். தற்போது நடிகை யாஷிகா அவர்கள் ராஜபீமா என்ற படத்தில் ஒரு செய்தியாளராக நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படம் பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களில் படப்பிடிப்புகள் நடந்து உள்ளது.

Advertisement