தமிழில் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் சென்ற ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் பங்கு பெற்றார்.

திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவர் பலராலும் அறியப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த், யோகி பாபு உடன் ஜாம்பி, மஹத்துடன் ஒரு படம் என்று தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதற்கு பெரும்பாலும் சில மோசமான கமன்ட்கள் குவியும். இந்த நிலையில் யாஷிகா சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

Advertisement

வழக்கம் போல அந்த புகைப்படத்தை கண்டு யாஷிகாவின் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று கமெண்ட்களை அல்லி வீசி வந்தாலும், ஒரு சிலர் கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் பெரும்பாலான ரசிகர்கள் கமன்ட்களை படிக்க மட்டுமே வந்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement