திரைப்படங்களில் 3000திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி பிரபலமாக இருந்தாலும், பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு தான் மிகக் பிரபலம் அடைந்தார் கவிஞர் சினேகன். ‘பாண்டவர் பூபி’ படத்தின் ‘தோழா தோழா’ பாடல், ‘ஆட்டோகிராப்’ படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் என பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சினேகன்.
இதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் !
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் ஒரு தனி நூலகம் அமைத்து அதில் ஒரு லட்சம் புத்தகங்களை வைக்க வேண்டும் என கூறி வந்தார். தற்போது அந்த வேளைகளில் முமுரமாக உள்ள சிநேகனுக்கு திருமண சப்தமும் கேட்டுவிட்டது.
மேலும் அவருக்கு நெருங்கிய பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த திருமண அறிவிப்புகளை எல்லாம் வாடும் ஜூன் 2018ல் அறிவிப்பார் கவிஞர். தற்போது அவர் தானே இயக்கி, ‘பொம்மி வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.