விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி என்ற சீரியல்களில் மூலம் கவனத்தை கவர்ந்து பின்னர் பிக் பாஸ் 5 சீசன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர்தான் பாவனி. கடந்த பிக் பாஸ் சீசன் 5 இல் வைல்ட் கார்டு மூலம் உள்ளே பந்த அமீர் பாவனியை காதலிப்பதாக குறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாவனி இந்த காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்வில் அமீருடன் ஒன்றாக நடனமாடி காதலை ஏற்றுக்கொண்டார்.

அதற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் டேட்டிங், நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என இருந்த இவர்கள் இருவரும் அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்தனர். அதற்கு பிறகு பல படவாய்ப்புகள் இவர்களுக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தான் பாவனி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த பதிவில் அவர் கூறியதாவது “என் வாழ்க்கையின் இந்த 15 நாட்கள் செலவழிக்க மிகவும் கடினமாக இருந்தது. இது கழுத்தில் சிறிய வலியால் தொடங்கியது. மேலும் வலி நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. நான் பல எலும்பியல் நிபுணரைக் கலந்தாலோசித்தேன், என் பிசியோதெரபியைத் தொடங்கினேன், ஆனால் வலி தாங்கமுடியாதது. பல தூக்கமில்லாத இரவுகளை செலவழித்த வலியிலிருந்து நான் அழ ஆரம்பித்தேன். இடையே படப்பிடிப்புகள் வேறு இருந்தது. இதனால் வலியுடன் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது.

ஹைதராபாத் சென்ற எனக்கு அங்குள்ள செட்களில் உள்ளவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். நான் வீட்டில் இருப்பதாய் போல உணரவைத்தனர். அப்படித்தான் நான் எனது படப்பிடிப்பு பகுதியை முடித்தேன். நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி இன்னும் மோசமாகிவிட்டது. கை உடைந்ததைப் போல என் வலது கையை உயர்த்தவே முடியவில்லை. அதிகாலை எழுந்து தயாராகி வருவது எனக்கு ஒரு பெரிய சிரமமாக இருந்தது. அதனால் வலியால் சத்தமாக கத்துவேன்.

Advertisement

இறுதியாக இந்த டாக்டர் சுகுமார் மற்றும் @Asian.spine.hospital உதவியுடன் என்னுடைய எண்டோஸ்கோபிக் டிசிக்டோமி அறுவை சிகிச்சையுடன் முடித்தேன். இப்போது வலி இல்லை அவருக்கு மிகபெரிய நன்றி. இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற உளேன். இந்த சம்பவத்தினால் நான் மட்டுமல்ல, என் குடும்பத்தினரும் என் நண்பர்களை நிறைய பாதிக்கப்பட்டனர். அமீர் உங்களுக்கு நன்றி உங்கள் தூக்கத்தையும் உங்கள் வேலையையும் தொந்தரவு செய்தேன் என்று எனக்குத் தெரியும்.

Advertisement

நான் வலியில் இருக்கும்போது, நான் ஒரு வெறித்தனமான குழந்தையாகிவிட்டேன் என்று எனக்குத் தெரியும். எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என்று அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதவியில் அனு நீங்கள் என்னை இயல்பு நிலைக்குத் கொண்டுவர எவ்வளவு பணி செய்தீர்கள் என்று எனக்கு தெரியும். நான் உன்னையும் தொந்தரவு கொடுத்தேன். என் மனநிலை மாற்றங்கள், கோபம், விரக்தியை எடுத்து கொண்டதற்கு நன்றி. மாம்தாவிற்கும் நன்றி, என்னைப் பார்வையிட்ட எனது நண்பர்கள் மற்றும் எனக்கு சிறப்பு உணரவைத்த எனது குடும்பத்திற்கு நன்றி என்று பதியிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement