பிரபல சின்னத்திரை நடிகை ரஷிதா தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார்.

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Advertisement

ரஷிதாவின் இன்ஸ்டா பதிவு :

இப்படி ஒரு நிலையில் தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்துளர். இந்த நிலையில் கணவர் மீது புகார் அளித்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை வைத்திருந்தார் ரஷிதா அதில், நீங்கள் அமைதியை உருவாக்கிகொண்டால், மற்றவர்களுக்கு எப்போது தாக்க வேண்டும் என்பது தெரியாது (When you build silence, people don’t know when to attack) என்றும் மற்றொரு ஸ்டோரியில், பலமாக இருப்பது தான் கடைசி வழி (Being strong is the only option left ) என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார் ரஷிதா. அதில் ஒரு பதிவில் ‘ நான் அனைத்தயும் உள்ளேயே வைத்து இருந்ததற்கு காரணம் இருக்கிறது.எந்த வருத்தமும் இல்லை, பாடத்தை கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் பொய்கள் எப்போதும் சத்தமாக தான் இருக்கும், உண்மைகள் அமைதியாக தான் இருக்கும். எந்த வருத்தமும் இல்லை, பாடத்தை கற்றுக்கொண்டேன்

Advertisement

தினேஷ் விளக்கம் :

இப்படி இருக்க தினேஷ் பேட்டியில் ‘டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி குறித்து கூறியதற்கு அவர் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ரக்ஷிதாவுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக தான் நட்பு. தினேஷ் என்னை தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறார். அவதூறாக என்னைப் பற்றி மீடியாவில் பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் தினேஷ் இடம் பேசி இருக்கிறது. அதற்கு அவர், எங்கள் பிரச்சனையில் ஜிஜி யின் தலையீடு இருப்பதற்கு தகுந்த ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் நான் நேரில் போய் கேள்வி கேட்பேன் என்று சொன்னதை அடிப்படையாக வைத்து புகார் கொடுத்திருக்கிறார்.

Advertisement

அவர்களுக்கு எங்க விவகாரத்தில் தலையீடு இல்லை என்றால் அவரே என்னை சந்தித்து விளக்கி இருக்கலாம். நான் அவருக்கு தெரியாத ஆளில்லை. அதை விட்டுவிட்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் என் மீது புகார் தந்ததை பார்க்கும்போது என் சந்தேகம் இன்னும் வலுவாகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த புகாரில் சில பெயர்களையும் சேர்த்து அவர்களையும் இந்த பிரச்சனைக்குள் இழுத்து விட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தை திசை திருப்பத்தான் இதை செய்திருக்கிறார் என்று எனக்கு நினைக்க தோணுது. அடுத்தவர்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement