தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

Advertisement

சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இந்த பிரச்சினை ஒரு வழியாக சுமுகமாக முடிவடைந்தது. இதனால் நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு தளபதிற்கு விஜய் மீண்டும் சென்றார்.

இந்த நிலையில் பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று போராட்டம் செய்துவந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் படப்பிடிப்பு சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பா ஜ கவை சேர்ந்த சிலர் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

ஆனால், படப்பிடிப்பு நடக்க கூடாது என்று பாஜகவைச் சேர்ந்த சிலர் அங்கே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான கம்பெனியில் படப்பிடிப்பை நடத்த அனுமதி தரக்கூடாது என்றும், உடனடியாக அந்த அனுமதியை ரத்து செய்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி உள்ளார்கள் இதனால் மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.லஞ்ச ஒழிப்புத் துறையும் அரசியல் கட்சியும் மாறி மாறி இப்படி விட்டார்கள் செய்வதால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்

Advertisement