தனது வழக்கமான பாணியில் ஜவான் திரைப்படத்தை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். இவர் ராஜா ராணி படத்தின் முலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இந்திய எல்லையில் தான் கதை துவங்குகிறது. உயிர் போகும் நிலையில் கிடக்கும் ஷாருக்கானை மக்கள் காப்பாற்றுகிறார்கள்.

Advertisement

ஜவான் படம்:

அவர் எப்படியோ பிழைத்து விடுகிறார். அவர் ஏன் வந்தார்? அவர் யார்? என்ற பிளாஷ்பேக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் உடன் சேர்ந்து பெண்கள் பலர் அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாதாக்களாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான்.

படத்தின் கதை:

திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார். அப்போது ஷாருக்கானை காப்பாற்ற இன்னொரு சாருக்கான் வருகிறார். இறுதியில் இந்த இரண்டு ஷாருக்கான் யார்? என்ன சம்பந்தம்? விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் என்ன தவறு செய்தார்? ஏன் அவர் குற்றவாளி? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

ப்ளூ சட்டை மாறன் :

ஒரே திரைப்படத்தில் விவசாயிகள் பற்றியும் மருத்துவமனை ஊழல்கள் பற்றியும் விஷவாயுக்களை பற்றியும் கூறியுள்ளார். படம் தொடக்கத்தில் இருந்து பார்த்தல் ஒரு ஒரு திரைப்படத்தில் இருந்தும் கட்சிகளை இந்த திரைப்படத்தில் வைத்துள்ளார்கள். படம் நாம் முன்பு பார்த்த படங்கள் போலவே இருந்தது. அவர் எடுத்த திரைப்படத்தையே அப்படியே எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்னவென்றே தெரியவில்லை. இந்த திரைப்படம் சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது. வழக்கமாக நாங்கள் சுமாரான மொக்க படங்களை பார்த்தாலே அந்த பக்கம் போகதீர்கள் என்று சொல்லுவோம்.

Advertisement

ஆனால் இந்த திரைப்படம் சூர மொக்கை திரைப்படம். இருந்தாலும் அனைவரும் தியேட்டரில் சென்று திரைப்படங்களை பாருங்கள். இந்த திரைப்படத்தை வெற்றி பெற வையுங்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் அவர் அங்கேயே சல்மான் கான், அமீர் கான் என அங்கேயே இருப்பார். அங்க உள்ள ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைப்பார். இந்த திரைப்படம் வெற்றி பெறாவிட்டால் அவர் இங்கு வந்து எங்க அண்ணனுக்கு நான் தான் பண்ணுவேன் என்று இங்க வந்தால் நம்ம நிலைமையை யோசித்து பாருங்கள். ஆகையால் சிந்தித்து செயல் படுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.               

Advertisement