நடிகையிடம் பொது இடத்திலும் செல்போன் மூலமும் பாலியல் சில்மிஷம் ! அரசியல்வாதி கைது

By Ajju · 23/3/2018
மும்பை அம்போலி என்னும் பகுதியில் பெண் நடிகரை தொந்தரவு செய்ததற்காக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரை கைது செய்துள்ளது மும்பை போலிஸ்.மும்பையை சேர்ந்த நடிகை ஒருவர் தினமும் அந்தேரி பகுதியில் உள்ள உடற்பயிற்ச்சி கூடத்திற்கு சென்றுவந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேசிய காங்கிரஸ் கட்சி நிறுபாரான விஸ்வநாத் ஷெட்டி என்பவரும் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். நடிகையை நீன்டநாட்களாக தொல்லைகொடுத்துள்ளார் விஸ்வநாத்.அந்த நடிகையை தன்னுடன் ஆபசத்திற்கு இணங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகை மறுக்கவே அவரது போனிற்கு ஆபசனமா மெசேஜ்களை அனுப்பியுள்ளார். கடந்த மாதம் பிப்ரவரி 13 ஆம் தேதி வழக்கம் போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ள அந்த நடிகையை வழிமறித்து அவரிடம் பேச முயன்றுள்ளார் விஸ்வநாத்.ஆனால் அந்த நடிகை நிற்காமல் போகவே அவரை தடுத்து நிறுத்தி தகாத இடத்தில் தொட்டு அத்துமீரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகை போலீசாரிடம் புகார் ஒன்ரை அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை ஐ .பி.சி 354,344 போன்ற பிரிவுகிகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தூள்ளனர் மும்பை போலிஸ்.இதுகுறித்து அம்போலி காவல் நிலைய ஆய்வாளர் தயா நாயக் தெரிவிக்கையில் நாங்கள் கைது செய்ய முயற்சித்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல் போன் சிக்னல் மூலம் அவரை ட்ராக் செய்ததில் அவர் மும்பையில் இருக்கிறார் என்று தெரியவந்தது.உடனே அங்கு சென்று அவரை கைது செய்தோம் மேலும் அவர் நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் ஒன்றையும் விண்ணப்பித்தார்.ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்து ஒரு நாள் காவல் பொறுப்பில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full