உலக அழகி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நடிகை “ஐஸ்வர்யா ராய்” மட்டும் தான். 1997 இல் மணிரத்னம் இயங்கி “இருவர்” படத்தில் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக நிலைத்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய்.தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் .

Advertisement

பல்வேறு பாலிவுட் நடிகர்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிய இவர் பின்னர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் தேவதையும் பிறந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு பதுமையாகவே வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார்

சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் 71வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து நடிகர், நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தனது மகளுடன் கலந்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

Advertisement

கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயின் உடை மற்றும் உதட்டு சாயம் ரசிகர்கள் மத்தியில் கேளி கிண்டலுக்கு உள்ளானது. ஆனால், இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இவரை பார்த்த அனைவரும் வாயடைத்து போய் விட்டார்கள். அந்த அளவிற்க்கு ஒரு வண்ணமயமான ஆடையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Advertisement