சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் பூமிகா. அதன் பிறகு விஜயுடன் பத்ரி ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் பூமிகா. 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் தனது கணவருடன் சேர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட்டார். ஆனால், அதில் நஷ்டம் அடைந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருப்பதால் தயாரிப்பில் நஷ்டம் ஆனதால்தான் மீண்டும் நடிக்க உள்ளதாக பலர் கூறினார். இது குறித்து பூமிகா கூறியதாவது,
இது இரு அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தி, இந்த செய்தி எப்படி வருகிறது என தெரியவில்லை. படத்தயாரிப்பில் நஷ்டம் என்பது உண்மைதன். அதில் எனக்கு அனுபவம் இல்லாததால் நஷ்டம் ஆகிவிட்டது. ஆனால் நல்ல படங்களை கொடுத்தேன் என்ற திருப்தி என்னிடம் உள்ளது என திட்டி தீர்த்தார் பூமிகா.