'இவங்களை எல்லாம் பார்த்தா' - காதலர் மீது புகார் அளித்த பின்னர் ஜூலி பதிவிட்ட முதல் பதிவு

By Rajkumar · 6/12/2021

காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் ஜூலி போட்டிருக்கும் இன்ஸ்டாக்ராம் பதிவைக் கண்டு பலரும் கல்வி கற்று வருகின்றனர். சென்னை அமைந்தகரை அய்யாவூ காலனி பகுதியை சேர்ந்த 'மனிஷ்'என்ற 26 வயதுடைய நபர் அண்ணாநகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருவதாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அவர் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்ததாகவும் ஜூலி கூறியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தன்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து தன்னிடம் இருந்து இருசக்கர வாகனம், 16 கிராம் தங்க செயின், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பலவற்றை மனிஷ் வாங்கியுள்ளார் என்றும் எது வரை அவருக்காக 2.30 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் ஜூலி தன்னுடைய புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மனீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும்  அவர் இல்லாமல் தன்னால்  வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.

மேலும் ஜூலியும் மனிஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போலீசார் அழித்துவிட்டு ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலன் மீது போலீசில் புகார் அளித்த அடுத்தநாளே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியல் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ஜூலி இதை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வருகிறார்கள். அதேபோல சமீபத்தில் ஜூலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் வதந்திகள் பரப்புவதும் அதை நம்பும் நபர்களையும் என்னால் மாற்ற முடியாது. வேலை வெட்டி இல்லாமல் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்தக் கீழ்த்தரமான நபர்களைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full