ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகம் ஆக தொடங்கிட்டனர். அதிலும் சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு உண்டு அதற்கு முக்கிய காரணம் நம்ம அணி தலைவர் தோனி தான்.

முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி எளிமையாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதியது, சென்னை அணியின் வலுவான பந்து வீசும் திறமையால் 20 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Advertisement

அவர்களை தொடர்ந்து வெளியாகிய சென்னை அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஒரு பகுதி ரன்களை எளிதாக எட்டியது, அவர் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ரெய்னாவும் தன பங்குக்கு 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் மெதுவாக ஆட்டம் நகர்ந்தது, பின் வழக்கம் போல கடைசி ஒவேரில் தோனி தன் பாணியில் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

Advertisement

இதில் சுவாரசியம் என்னவென்றால் பிராவோ பந்து வீசும்போது, LBW அப்பீல் செய்தார். இருப்பினும் தோனி அப்பீல் செய்யாமல் அமைதியாக இருந்தார். எதை கண்ட பிராவோ என்ன வென்று கேட்ட தோனியும் அவர் பாணியில் புருவங்களை மேல தூக்கினார். வீடியோ காட்சி கிலே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement