சமூக வலைத்தளங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கும் அறிவுரை தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த செயலை பார்த்து அரசியல் பிரபலங்கள் கதிகலங்கி இருக்கிறார்கள்.

Advertisement

மாணவர்கள் பரிசு விழா:

மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள்.

ஆலோசனை கூட்டம்:

அதோடு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். ஆகவே, இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

Advertisement

புஸ்ஸி ஆனந்த் அறிவுரை:

இந்த நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்று இருந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை. தற்போது விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் இந்த கூட்டத்திற்கு மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை ஏற்றி இருந்தார். அதில் அவர், ரசிகர் மன்றமாக துவங்கி இப்போது மக்கள் இயக்கமாக பயணித்து வருகிறோம். வரும் காலங்களில் வேறொரு பரிமாணத்தில் செயல்பட முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதற்காக பல கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.

Advertisement

சமூக வலைத்தளம் குறித்து சொன்னது:

மேலும், மக்கள் இயக்கம் தமிழகத்தில் பலமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிட கூடாது. கண்ணியமான வார்த்தைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்க கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் நல்ல ஒழுக்கமான பாதையில் பயணிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்ய கூடாது என்று கூறியிருந்தார். பின் இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த உடன் நிர்வாகிகளுக்கு பல வகையான காய்கறிகளுடன் கூடிய சைவ உணவு விருந்து அளிக்கப்பட்டிருந்தது.

Advertisement