4 சக்கரம் கொண்ட சொகுசு வசதிகள் உடைய காரில் சென்றவர் மீது ஹெல்மெட் அணியாமல் சென்றார்கள் என்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளது என்ற அதிசயமான நிகழ்வு சென்னையில் தான் நடக்கிறது. இந்த நிகழ்வு வினோதமான நிகழ்வாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தான் பரணீஸ்வரன். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி. இவர் தன்னுடைய மனைவி பெயரில் தான் சொகுசு வசதிகள் கொண்ட ஒரு காரை சில ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கினார்.மேலும் சில தினங்களுக்கு முன் போக்குவரத்து காவல் துறையிலிருந்து நந்தினி தன்னுடைய மொபைலில் இருந்து குறுஞ்செய்தியை அதாவது மெசேஜை தன் கணவருக்கு அனுப்பியுள்ளார்.

அது ஆகஸ்ட் 25ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அருகே உள்ள சாலையில் தன்னுடைய காரில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் போது ஹெல்மெட் அணியவில்லை என்று நூறு ரூபாய் அபராதம் விதித்தார் என்று தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி வாகன எண், முகவரி எல்லாம் சரியாக இருப்பதை பார்த்து மேலும் குழப்பம் அடைந்தார். மேலும் அவருடைய வாகன பதிவு எண்ணையும், இது நான்கு சக்கர வாகனம் தான் என்றும் விளக்கமாக இமெயில் வழியாக போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.ஆனால் மேலும் அவர் அனுப்பிய ஈமெயில் குறித்து எந்த ஒரு சரியான தகவலும் கிடைக்காததால் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்தார் நந்தினியின் கணவர் .

Advertisement

மேலும் அவர் கூறியது , போக்குவரத்து துறையின் விதிமுறைகள் படி சாலைகளின் விதிமீறல் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்களை கண்காணித்து வருவது தான் வழக்கம். இந்த அபராதம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அல்லது புகைப்படங்கள் எதுவும் அபராத சீட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் புகைப்படம் எதுவும் அபராத சீட்டில் இணைக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் கூறினார். மேலும் போக்குவரத்து துறை இணையம் வழியாக தான் அபராத சீட்டு அனுப்பியது.இது குறித்து போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக பதிவு செய்த வாகனத்தில் எண்ணிற்குரிய முகவரிகள் பெற்றிருக்க வேண்டும் , அப்போது அந்த முகவரிகள் மூலம் அது எந்த வாகனம் என்ற தகவலும் கிடைத்துவிடும் என்றும் கூறினார்.ஆனால் அவர்கள் அந்த மாதிரி எந்த ஒரு செயலையும் செய்யவில்லை.

மேலும் போக்குவரத்து காவல்துறையினரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏ என் பி ஆர் கேமராக்கள் தானாகவே இந்த மாதிரி வாகனங்களின் எண் பதிவு ,முகவரி ஆகியவையை தெளிவாகவும் அது எந்த மாதிரியான வாகனம் என்றும் பதிவு செய்யும் சிறப்பு கொண்டது. ஆனால் அத்தகைய கேமராக்கள் சென்னையில் அண்ணா நகர் மற்றும் முட்டுக்காடு பகுதியில் மட்டும்தான் பொருத்தப்பட்டுள்ளது.ஏன் இந்த வகை கேமராக்களை பொருத்தவில்லை? எப்படி தவறு நிகழ்ந்தது? என்று காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

தேசிய தகவல் மையமான நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டரில் இருந்து தான் இணைய அபராத சீட்டுகள் அனுப்பப்படும்,ஆனால் அந்த தகவல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தான் இருக்கிறது.ஆகவே இவ்விரு மொழிகளும் அறியாதவர்கள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எப்படி அறிந்து கொள்வார்கள். விவரம் ஏதும் தெரியாமலேயே அவர்கள் காவல்துறையில் இருந்து அனுப்பப்பட்ட குற்றங்களை எண்ணி என்ன ? நடவடிக்கைகள் எடுப்பார்களோ என்று பயந்து தங்கள் மீது தவறில்லை என்றாலும் அபராதம் செலுத்தும் நிலைக்கும் நிறைய பேர் தள்ளப்பட்டார்கள். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது

Advertisement
Advertisement