தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை பானு ப்ரியா. 90ஸ் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று அணைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். சமீபத்தில் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

பானுப்பிரியாவின் வீட்டில் வேலைபார்க்கும் 14 வயது சிறுமியின் தாய் பிரபாவதி, பானுப்பிரியா மீது ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளனர்.அந்த புகாரில் எனது 14 வயது மகளை பானுப்ரியாவின் வீட்டில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக வீட்டு வேலைக்கு அனுப்பி இருந்தேன்.

Advertisement

ஆனால், கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. இந்நிலையில் எனது மகள் சமீபத்தில் எனக்கு போன் செய்து
பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன்(நடிகை வித்யாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது) என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அடித்து துன்புறுத்துகின்றனர் என்று கூறினார்.

இதையடுத்து நான் பானுப்ரியா வீட்டிற்கு சென்ற போது எங்களிடம் பணம் உள்ளது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டனர் என்று பாதிக்கப்பட்ட மகளின் அம்மா புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளனர்.

Advertisement

Advertisement
Advertisement