ஒரு நாளுக்கு அரை டஜன் ஆபாச மெசேஜ் வருகிறது..!அதில் ஒருவர் இவர் தான்..!புகைப்படத்தை வெளியிட்ட சின்மையி..!

By Rajkumar · 2/12/2018
தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பாடகி சினமயியை மிகவும் கேவலமாக திட்டி தொடர்ந்து ஒரு நபர் மெசேஜ் செய்து வருகிறாராம். சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதே போல ஒரு நபரும் பாடகி சின்மையிக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அந்த நபர் யார் என்று அவருடைய பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனுக்கு தனிமும் இதுபோல டசன் கண்ணகில் போனிலும் இ-மெயிளிலும் ஆபாச மெசேஜ் வருகிறது என்றும் அதை அனைத்தையும் நான் வெளியில் சொல்வது இல்லை என்றும் சின்மயி கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full