தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார்.

Advertisement

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போல சின்மயிக்கு பலர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு ஒரு நபர் சுய இன்பம் செய்து புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை blur செய்து வெளியிட்ட சின்மயி, “ஒரு பெற்றோராக,வருங்கால மருமகன்களிடம் தங்கள் ஆணுறுப்பின் புகைப்படங்கள் அல்லது சுயஇன்பத்தின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பெண்களிடம் கேட்காமல் அனுப்பியிருக்கிறார்களா என்று நான் கேட்க வேண்டுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement
Advertisement