ராதிகா அவர்கள் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி.

கண்ணின் மணி கண்ணின்மணி என தொடங்கும் பாடலும் அனைத்து இல்லத்தரசியின் வீட்டையும் ஆக்கிரமித்து உள்ளது. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான். இன்னும் சொல்லப்போனால் சித்தி சீரியலுக்கு பிறகு தான் ராதிகா அவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானர். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.

Advertisement

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ராதிகாவின் இந்த சித்தி 2 சீரியல் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், கடந்த வாரத்தில் இந்த தொடர் TRP யில் டாப் 5 இடத்தில் கூட வரவில்லை. சித்தி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இப்படி டிஆர்பியில் சித்தி 2 படு மோசமான நிலையில் இருக்கிறது. சொல்லப்போனால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் 4 தொடர்கள் டிஆர்பி இன் டாப் 4 இடத்தை பிடித்துள்ளது ஆனால் சித்தி டு டாப் 5 இடங்களில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement
Advertisement