தென்னிந்திய சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : ஐஸ்வர்யா ராய்யின் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படம்..

Advertisement

Advertisement

இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தனது முன்னாள் காதலன் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகை சமந்தா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சித்தார்த்தை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது ஊடகங்களிலும் வைரலாக ஆனது.

2013 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து ஜபர்தஸ்த் எனும் டோலிவுட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் நடிகை சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் டேட்டிங் செய்தும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. பின் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நடிகை சமந்தா காதலுக்கு குட்பை சொல்லி இருந்தார்.

அதற்குப் பிறகு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய முன்னாள் காதலன் குறித்து பேட்டியில் கூறியது, என்னுடைய முதல் காதல் மூலம் நான் தவறான முடிவை எடுத்து விட்டேன். நல்ல நேரம் தான் அதில் சிக்கிக் கொள்ளாமல் கடந்து வந்தது. இது என்னுடைய அதிர்ஷ்டம். நான் காதலை பிரேக் அப் செய்யவில்லை என்றால் நான் பழம் பெரும் நடிகை சாவித்திரி அம்மா மாதிரி நான் கஷ்டப்பட்டு இருப்பேன் என்று கூறினார்.

இந்த தகவல் டோலிவுட் மட்டும் கோலிவுட் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. தற்போது நடிகை சமந்தா அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால்,திடீரென்று சமந்தா இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். அஸ்வின் சரவணன் இயக்க உள்ள ஹாரர் படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்று தெரியவந்து உள்ளது.

Advertisement