இன்றைய முன்னோட்ட வீடியோவில்   ஒரு டாஸ்கில்  சினேகன் ஆரவ்வை கண்மூடி தனமாக தாக்குவது போல் உள்ளது.

Advertisement

சினேகன் ஆரவ்வை அவ்வாறு தாக்குவதற்கு என்ன காரணமாக இருக்க கூடும் ?

பொதுவாகவே சினேகன் அனைத்து டாஸ்க்குகளிலும் தன்னுடைய முழு பலத்தையும் கொடுத்து எப்படியாது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடுவார். ஆனால் இன்றய டாஸ்கில் அவர் அதையும் தாண்டி ஆக்ரோஷமாக காணப்பட்டார்.

Advertisement

அவருக்கு ஆரவ் மீது ஏற்கனவே வன்மம் இருப்பது கடந்த வாரம் நிரூபணமானது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே சற்று மரியாதை குறைவுடன் பேசி கொண்டனர். அந்த வன்மத்தின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம்.

Advertisement

அடுத்ததாக ஓவியாவுக்கு வெளியில் ரசிகர்கள் மிக அதிக அளவில் உள்ளனர் என்பதை சினேகன் அறிந்து கொண்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதை வைத்து பபுரிந்து கொள்ள முடிகிறது. ஆரவ்வை இப்படி தாக்கினால் ஓவியா ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் செய்திருக்கலாம்.

டாஸ்கின் முடிவில் அவர் சோர்வாக கட்டில் மெத்தையில் படுக்கிறார், ஒருவேளை ஆரவ்வை இவ்வாறு தாக்கிவிட்டோமே என்ற வருத்தத்தில் அவர் படுத்தாரா என்றும் யோசிக்க தோன்றுகிறது.

இன்றய நிகழ்ச்சியை பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்.

Advertisement