எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தங்குவதற்கு வீடு வேண்டும் என தமிழக முதல்வரிடம் மனு கொடுத்த நிலையில் தற்போது அவருக்கு தேவையான உதவிகள் கிடைத்து உள்ளது. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக 1944 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் சென்னை பிராட்வே என்ற ஒரே திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் நிகழ்த்தியது. அன்றய சென்னையான ‘மதராஸ்’ கால கட்டத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார்.

இதையும் பாருங்க : ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் ஒரு அண்ணனை தான் தெரியும் – ஆன, அவரது ரெண்டு அண்ணன் இப்படி பரிதாபமாக இருந்துள்ளார்ளாம்.

Advertisement

தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.

தியாகராஜ பாகவதருக்கு கமலம், ராஜம் என்ற இரு மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி ஆன கமலத்தின் குடும்பம் மட்டுமே சென்னையில் வசித்துவருகின்றது. இரண்டாவது மனைவி ராஜத்தின் குடும்பம் பற்றி தகவல் தெறியவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தியாகராஜர் பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் முதல்-அமைச்சரின் தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். தற்போது தங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

Advertisement

அவரின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு செல்லப்பட்டு இருந்த நிலையில், பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, சாய்ராம் கூறுகையில், ”என் தாத்தாவை போலவே, நாங்களும் எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு கடமைப்பட்டு உள்ளோம். முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. அரசுக்கும் எங்களின் நிலையை எடுத்துரைத்த பத்திரிகைகளுக்கும் நன்றி,”என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement