கணவனை பிரிந்த நித்யா செய்த செயலால் குவியும் பாராட்டு..? அப்படி என்ன செய்தார் தெரியுமா ..?

By Ajju · 30/4/2018
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்தை குறைக்க போக்குவரத்துக்கு துறை பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு அளித்துவருகின்றது. மேலும் சாலை விபத்துகளை குறைக்க இந்த வரம் சாலை விழிப்புணர்வு வாரமாக தற்போது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பகுதிகளில் தமிழ் நாடு போக்குவரத்துக்கு காவல் துறை மற்றும் சென்னையில் உள்ள ஒரு பிரபல தலைக்கவச விற்பனை நிறுவனம் ஒன்றும் இணைந்து மக்களுக்கு சாலை விபத்துகளை பற்றிய விழிப்புணர்வையும் அளித்ததோடு , தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசத்த்தையும் அளித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வேறு யாரும் இல்லை பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாதான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர் நடிகர் தாடி பாலாஜி,சில மாதங்களுக்கு தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். பல்வேறு பிரச்னைக்கு பிறகு தனது கணவரை பிரிந்து தனியாக வாழும் நித்யா தற்போது சமூக அக்கறையோடு இந்த செயளில் ஈடுபட்டு வந்துள்ளது மக்களின் மனதில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.மேலும் இவரது இந்த மற்ற பெண்களுக்கு ஒரு உதாரணமாகியுள்ளார் என்பது சந்தேகமில்லை.
Tamil Behind Talkies AMP · Quick view
View full