குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பானது என்பதால் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர்.

அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இந்த சீசனில் இதுவரை மதுரை முத்து, தீபா, தர்ஷா என்று மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கூட இந்த நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகது. அதற்கு முக்கிய காரணமே சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா வரும் ஞாயிற்று கிழமை காலை 11 மணி முதல் 9 மணி நேரம் இரவு 8 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால்

கடந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இறுதி போட்டி 6 மணிக்கு துவங்கி 6 மணி நேரம் ஒளிபரப்பானது. இதனால் கடந்த வாரம் ஞாயிற்று கிழமையே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் இந்த வாரமும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பக போவது இல்லை என்பதால் குக்கு வித் கோமாளி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்..

Advertisement
Advertisement